sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வெள்ளாளபுரம் ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் வருமா? நீரேற்று திறனை அதிகப்படுத்த வேண்டுகோள்

/

வெள்ளாளபுரம் ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் வருமா? நீரேற்று திறனை அதிகப்படுத்த வேண்டுகோள்

வெள்ளாளபுரம் ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் வருமா? நீரேற்று திறனை அதிகப்படுத்த வேண்டுகோள்

வெள்ளாளபுரம் ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் வருமா? நீரேற்று திறனை அதிகப்படுத்த வேண்டுகோள்


ADDED : ஆக 06, 2024 08:29 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தாரமங்கலம் அருகே, வெள்ளாளபுரம் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 360 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட கையோடு, உருவாக்கப்பட்ட இந்த ஏரி தற்போது, 100 ஏரிகள் நிரப்பும் திட்-டத்தில் ஒன்றாக உள்ளது.

கடந்த, 31ல், மேட்டூர் உபரிநீர், திப்பம்பட்டி பிர-தான நீரேற்று நிலையத்தில் இருந்து மின்-மோட்டார் உதவியுடன், வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக, எம்.காளிப்பட்டி ஏரி நிரம்பி, தற்போது மானத்தாள் ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் வந்து கொண்டிருக்கிறது. மானத்தாள் ஏரி நிரம்பி வெளியேறும் நீர், அமரகோணி, பெரியகா-டம்பட்டி, பவளத்தானுார், துட்டம்பட்டி ஏரியை தொடர்ந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள வெள்-ளாளபுரம் ஏரிக்கு தண்ணீர் வந்து சேர வேண்டும். ஆனால், உபரிநீர் வேகம் குறைவான அளவில் இருப்பதால், மானத்தாள் ஏரியை கடந்து அடுத்த-டுத்துள்ள ஏரிக்கு வரும் தண்ணீர், வெள்ளாளபுரம் ஏரியை வந்தடையுமா என, விவசாயிகள் சந்தே-கப்படுகின்றனர்.

இது தொடர்பாக, வெள்ளாளபுரம் நீர்பாசன விவ-சாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பின் கூறியதாவது: திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலைத்தில், 940 குதிரை திறன் கொண்ட, 10 மின்மோட்டாரில், ஒரு மோட்டார் மட்டுமே இயக்குவதால், குறைந்த அளவிலான உபரிநீர் மட்டுமே, ஏரிகளுக்கு வருகின்றன. அதனால், ஏரிகள் அடுத்தடுத்து நிரம்புவது தாமதமாகிறது. எனவே, அனைத்து ஏரிகளும் வேகமாக நிரம்-பிடும் வகையில், இயக்கப்படும் மின்மோட்டார் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இல்-லையெனில், வெள்ளாளபுரம் ஏரி நிரம்புவது கேள்வி குறியாகி, 2,000 ஏக்கர் நிலங்கள் பாசனவ-சதி பெறுவது பாதிக்கப்படும். அதை சார்ந்துள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல், இத்திட்-டத்தின் நோக்கம் வீணாகிவிடும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us