ADDED : ஜூன் 19, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அம்மாபேட்டை அருகில் உள்ள காமராஜர் காலனி, செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 47.
இவர் அதே பகுதியில், அவருக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டுக்கு ஒயரிங் செய்வதற்காக, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 ஒயர் பண்டல்களை வாங்கி வைத்திருந்தார். கடந்த 21 ல், அவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வீராணம் போலீசில் புகார் அளித்தார். திருடிய நபர்களைபோலீசார் தேடி வருகின்றனர்.