ADDED : ஜூலை 05, 2026 04:44 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்:மேட்டூர்,
கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி மேல்காட்டூரை சேர்ந்தவர் அண்ணாதுரை,
47. டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள், 42.
இவர்களுக்கு இரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
கடந்த மாதம், 26ல் பீரோவில்
இருந்த, 6 மற்றும் 4 பவுன் கொண்ட, இரு தங்க சங்கிலிகளை மட்டும்
காணவில்லை. அதன் மதிப்பு, 1.85 லட்சம் ரூபாய். அதேநேரம் மற்ற
சங்கிலிகள் இருந்தன. நேற்று அண்ணாதுரை புகார்படி, மேட்டூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.
