/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
100 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
/
100 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
ADDED : டிச 27, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார், கெங்கவல்லியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வந்த, 'இண்டிகோ' காரை நிறுத்தி, சோதனை செய்தபோது, 100 கிலோவில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது.
அத்துடன் காரை பறிமுதல் செய்து, அதில் வந்த இருவரிடம் விசாரித்ததில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, மங்களபுரத்தை சேர்ந்த பிரசாந்த், 25, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே தமையனுாரை சேர்ந்த சிவபாலன், 35, என தெரிந்தது.
இருவரையும் கைது செய்து கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.