ADDED : பிப் 10, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அ.ம.மு.க., ஒன்றிய செயலராக இருந்த மலைபெருமாள் தலைமையில், 100 பேர், அக்கட்சியில் இருந்து விலகினர். அவர்கள் நேற்று சேலத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
அவர்களுக்கு, இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்து, தேர்தல் பணியை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நகர செயலர் மோகன், ஆத்துார் கிழக்கு ஒன்றிய செயலர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

