ADDED : ஜூலை 11, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.
அதை முன்னிட்டு, 3ம் கால பூர்ணாஹூதி நேற்று நடந்தது. முன்னதாக மூலவர் பாண்டு-ரங்கநாதர் உள்ளிட்ட பிற தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்-யப்பட்டன. தொடர்ந்து, 108 கலச தீர்த்தம் வைத்து, பட்டாச்சாரி-யார்கள் வேத மந்திரம் முழங்க, மகா தீபாராதனை காட்டப்பட்-டது. தொடர்ந்து சுவாமிக்கு கலச தீர்த்த அபிேஷகம் நடந்தது. இந்த வைபவத்தை, ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து தரிசனம் செய்தனர்.