ADDED : நவ 16, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்;சேலம், வீராணம், தாதம்பட்டியை சேர்ந்த, 15 வயது சிறுவன், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறான். அவன்
சரியாக படிக்கவில்லை என, தந்தை திட்டியுள்ளார்.
கோபம் அடைந்த மாணவன், கடந்த, 12ல் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் புகார்படி, வீராணம் போலீசார் தேடுகின்றனர்.

