/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு 11,497 மாணவர்கள் பங்கேற்பு
/
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு 11,497 மாணவர்கள் பங்கேற்பு
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு 11,497 மாணவர்கள் பங்கேற்பு
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு 11,497 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : அக் 20, 2024 04:25 AM
சேலம்: பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு, சேலம் மாவட்டத்தில் நேற்று, 40 மையங்களில் நடந்தது. அதில் அரசு, அதன் உதவி பெறுபவை, தனியார் பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமாக எழுதினர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவர்களின் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்த, இத்தேர்வு நடத்தப்படுகிறது. 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்-பட்டு, மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை, 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் அரசு பள்ளி மாணவர் 750 பேர், உதவி பெறுபவை, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 750 பேருக்கு வழங்-கப்படுகிறது. இத்தேர்வை, சேலம் மாவட்டத்தில், 11,497 மாணவ, மாணவியர் எழுதினர். 427 பேர் வரவில்லை. தேர்வு பணியை, முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்ட கல்வித்-துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். தேர்வு பணியில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.