sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 15ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

/

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 15ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 15ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 15ம் ஆண்டு விழா கொண்டாட்டம்


ADDED : மார் 21, 2024 02:04 AM

Google News

ADDED : மார் 21, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில், 15ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நாலெட்ஜ் கல்லுாரி அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் குமாரசாமி, பொருளாளர் சுரேஷ்குமார் பேசினர்.

சென்னை மல்டி கோர் வேர் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையின் தலைமை அதிகாரி சசிகாந்த் ஜெயராமன்; சேலம் தங்கம் வோல்டு பள்ளி தலைவர் திருநாவுக்கரசு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

முதல்வர் சீனிவாசன், கல்லுாரி ஆண்டறிக்கையை வாசித்தார். மேலாண் துறையின் இயக்குனர் ஸ்டீபன், மேலாண் துறை மாணவர்களின் சாதனைகளை பேசினார். கல்லுாரி துணை முதல்வர் விசாகவேல், ஆசிரியர்கள், மாணவர்களின் சாதனைகளை தொகுத்து வழங்கினார்.

கடந்த கல்வி ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பின் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் நாலெட்ஜ் அறக்கட்டளை உறுப்பினர்கள், இயக்குனர்கள், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us