/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எழுத்தறிவு திட்ட தேர்வு: 1,694 பேர் பங்கேற்பு
/
எழுத்தறிவு திட்ட தேர்வு: 1,694 பேர் பங்கேற்பு
UPDATED : டிச 15, 2025 01:20 PM
ADDED : டிச 15, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், சேலம் மாவட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட, எழுத படிக்க தெரியாத, 69,714 பேருக்கு, அந்தந்த பகுதி தொடக்கப்பள்ளிகளில், தன்னார்வலர்கள் மூலம் கடந்த ஜூன் முதல், 6 மாதங்களாக அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கற்பிக்கப்பட்டது.
இப்ப-யிற்சி முடித்தவர்களுக்கு தேர்வு, சேலம் நகர்புற வட்டாரத்தில் உள்ள, 72 மையங்களில் நேற்று நடந்தது. 1,694 பேர் எழுதினர். வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வை-யாளர்கள் கண்காணிப்பில் தேர்வு நடந்தது. உடனே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்-பட்டன.

