/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
18 பவுன் திருட்டு: தாய், மகன் உள்பட 4 பேர் கைது
/
18 பவுன் திருட்டு: தாய், மகன் உள்பட 4 பேர் கைது
ADDED : அக் 13, 2024 08:28 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் செந்தில்மணி. நிதி நிறுவனம் நடத்துகிறார்.
கடந்த, 3ல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்துார் கோவில் சென்றார். மீண்டும், 6 காலை
வீட்டுக்கு வந்தபோது வீடு திறக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, 18 பவுன் நகைகள், 30,000 ரூபாய்
திருடுபோ-னது தெரிந்தது. செந்தில்மணி புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்து, 'சிசிடிவி'
கேமரா பதிவுகளை ஆய்வு செய்-தனர். அதில் நகை, பணத்தை கொள்ளையடித்தது
பொன்னம்மா-பேட்டையை சேர்ந்த அப்சல் காச்சா, 35, அவரது தாய் மும்தாஜ், 62, அம்மாபேட்டை
கண்ணன், 32, கிச்சிப்பாளையம், நாராயண நகர் அலாவுதீன் பாஷா, 38, என தெரிந்தது. அவர்களை
நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 6 பவுன் நகையை மீட்டனர்.