/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
31வது முகாமில் 180 பேர் ரத்த தானம்
/
31வது முகாமில் 180 பேர் ரத்த தானம்
ADDED : ஜன 27, 2025 03:11 AM
சங்ககிரி: குடியரசு தினத்தை ஒட்டி சேலம் அரசு மருத்துவமனை, வடுகப்-பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், சங்ககிரி, வி.என்.பாளையம் யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில், 31ம் முறையாக ரத்த தான முகாம், வி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்-ளியில் நேற்று நடந்தது. சங்ககிரி மருத்துவர் ஜெகன்நாதன், லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் கந்தசாமி தொடங்கி வைத்தனர்.
சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் சசி, வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அலுவலர் வைத்-தீஸ்வரன் தலைமையில் மருத்துவ குழுவினர், ரத்த தானம் பெற்-றனர். 30 பெண்கள் உள்பட, 180 பேர் ரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு பழங்கள், அசைவ உணவுகள் வழங்கப்பட்டன. லாரி உரிமையாளர் சங்க பொருளாளர் செங்கோட்டுவேல், பல்-வேறு அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், மாவட்ட 'ஏசி' ரெப்ரிஜீரேஸன் பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில், சேலம் அரசு மருத்துவமனையில், 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், ரத்த தானம் செய்தனர். தலைவர் நவநீதகிருஷ்ணன், செயலர் பன்னீர்செல்வம், பொரு-ளாளர் அஸ்கர்அலி உள்பட பலர் பங்கேற்றனர்.

