sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காருடன் 195 கிலோ புகையிலை பறிமுதல் கர்நாடகா, கேரளத்தை சேர்ந்த 2 பேர் கைது

/

காருடன் 195 கிலோ புகையிலை பறிமுதல் கர்நாடகா, கேரளத்தை சேர்ந்த 2 பேர் கைது

காருடன் 195 கிலோ புகையிலை பறிமுதல் கர்நாடகா, கேரளத்தை சேர்ந்த 2 பேர் கைது

காருடன் 195 கிலோ புகையிலை பறிமுதல் கர்நாடகா, கேரளத்தை சேர்ந்த 2 பேர் கைது


ADDED : அக் 17, 2025 01:46 AM

Google News

ADDED : அக் 17, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், சேலம் மாவட்டம் ஓமலுார், புளியம்பட்டியில், சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, சிறப்பு பிரிவு போலீசார், வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக வந்த வோல்ஸ்வேகன், சியாஸ் ஆகிய இரு கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இரு கார்களிலும், 195 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன.

அதன் மதிப்பு, 1.85 லட்சம் ரூபாய். கார்களை ஓட்டி வந்தவர்களிடம் விசாரித்தபோது, கேரள மாநிலம் கண்ணுாரை சேர்ந்த அப்துல் சமது, 42, கர்நாடகா மாநிலம் வடக்கு பெங்களூரு சஜீர், 41, என்பதும், பெங்களூருவில் இருந்து, கேரளத்துக்கு புகையிலை பொருட்களை கடத்த முயன்றதும் தெரிந்தது.இதனால் காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, ஓமலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us