/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜோதிடரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
/
ஜோதிடரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
ADDED : நவ 08, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:வீரபாண்டி
அருகே அக்கரைபாளையம், கோடங்கி நாயக்கனுாரை சேர்ந்தவர் கண்ணன்.
பாலம்பட்டியில் ஜோதிடம் பார்க்கிறார். நேற்று முன்தினம் மதியம்,
'எக்ஸல்' மொபட்டில், பூலாவரி ஆத்துக்காட்டில் வந்து
கொண்டிருந்தபோது, ஸ்கூட்டியில் வந்த 2 பேர், கத்தியை காட்டி
மிரட்டி, கண்ணனிடம் இருந்த, 2,000 ரூபாய், மொபைல் போனை
பறித்துச்சென்றனர்.
அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார்
விசாரித்து, ஆத்துக்காட்டை சேர்ந்த சதீஷ், 25, தாதகாப்பட்டி கோபி,
24, ஆகியோரை, கைது செய்தனர்.

