ADDED : அக் 31, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், காடையாம்பட்டி, தளவாய்பட்டி அருகே, 'ஏர்டெல்' நிறுவனத்தின் மொபைல் போன் கோபுரம் குறித்து புகார் வந்ததால், அதன் செக்யூரிட்டி ஈஸ்வரன், 63, கடந்த, 28ல், அங்கு சென்று பார்த்தார்.
அப்போது, 10,000 ரூபாய் மதிப்பில், 340 மீட்டர், 16 எம்.எம்., ஒயர் திருடுபோனது தெரிந்தது. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்த சீனிவாசன், 27, பிரகாஷ், 27. ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

