ADDED : பிப் 17, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் : கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி, கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன், 60.
இவர் அருகே உள்ள கரடு அடிவாரம் பட்டி போட்டு, 20க்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் மதியம், கரடு பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஒரு ஆட்டை, இரு நாய்கள் கடித்து குதறின. படுகாயம் அடைந்த ஆடு உயிரிழந்தது. அதேபோல் அங்குள்ள குறிஞ்சி நகரை சேர்ந்த குமாரின் ஆடுகள், நேற்று கணவாய்காட்டில் மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது ஒரு கிடாவை, நாய்கள் கடித்து குதறின. இதில் ஆடு இறந்தது.