/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை2 பேருக்கு 7 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை2 பேருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : ஏப் 23, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்தவர் டினோஸ் ரூபன், 35. கூலித்தொழிலாளியான இவருக்கு, சேலம், குகையை சேர்ந்த சத்தியராணி, 34, என்பவருடன் பழக்கம் இருந்தது. 2019ல், 14 வயது சிறுமிக்கு, டினோஸ் ரூபன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு சத்தியராணி உடந்தையாக இருந்தார். இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் இருவருக்கும், 7 ஆண்டு சிறை தண்டனை, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி நேற்று
உத்தரவிட்டார்.

