/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு முன் நிறுத்தியிருந்த 2 மொபட் எரிந்து நாசம்
/
வீடு முன் நிறுத்தியிருந்த 2 மொபட் எரிந்து நாசம்
ADDED : அக் 10, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீடு முன் நிறுத்தியிருந்த
2 மொபட் எரிந்து நாசம்
சேலம், அக். 10-
சேலம், நரசோதிப்பட்டி, பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்தவர் சுமன், 38. மேச்சேரியில் உள்ள, இரும்பு கம்பெனியில் பணிபுரிகிறார். அவரது வீடு முன் நேற்று முன்தினம், ஐூபிட்டர், ஸ்கூட்டி பெப் மொபட்டுகள் நிறுத்தப்பட்டிருந்தன. நள்ளிரவு, 12:00 மணிக்கு, இரு மொபட்டுகளும் தீப்பிடித்து எரிந்தன. சுமன் உள்ளிட்ட குடும்பத்தினர் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். ஆனால் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்தது. சுமன் புகார்படி, சூரமங்கலம் போலீசார், மின்கசிவால் ஏற்பட்டதா, யாரேனும் தீ வைத்தனரா என விசாரிக்கின்றனர்.