/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாயி வீட்டில் திருடிய 2 பேர் கைது
/
விவசாயி வீட்டில் திருடிய 2 பேர் கைது
ADDED : செப் 21, 2024 06:50 AM
வீரபாண்டி: சேலம் மாவட்டம் சீரகாபாடியை சேர்ந்த விவசாயி கந்தசாமி, 65. இவரது வீட்டில், கடந்த, 5ல், 6 பவுன், 2 லட்சம் ரூபாய் திருடு-போனது. மறுநாள் அவர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். தனிப்படை அமைத்து, திருடர்களை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று காலை, தனிப்படை போலீசார் கொம்பாடிப்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாக-னத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்ததில் அவினாசியை சேர்ந்த தர்மகுமார், 45, பாஸ்கர், 23, என்பதும், கந்தசாமி வீட்டில் திருடியவர்கள் என்பதும்
தெரிந்தது.இருவர் மீதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், 15க்கும் மேற்-பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதனால்
இருவரையும், போலீசார் கைது செய்தனர்.