ADDED : ஏப் 14, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஆட்டையாம்பட்டி போலீசார், அங்குள்ள காளியம்மன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த, 2 பேரை சோதனை செய்ததில், கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
அவர்களை, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், ஆட்டையாம்பட்டி சத்யராஜ், 31, திருமலைகிரி பிரசாந்த், 21, என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.