ADDED : ஜூன் 13, 2026 02:58 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், சன்னியாசிகுண்டை சேர்ந்த, மாது மகள் சத்யா, 23. சேலம், 5 ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 10ல் பணிக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கா-ததால், அவரது பெற்றோர் புகார்படி, கிச்சிப்பா-ளையம் போலீசார் தேடுகின்றனர்.
அதேபோல் ஆட்டையாம்பட்டி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த, சரவணன் மகள் சம்ரிதி, 22. சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுா-ரியில், 2ம் ஆண்டு படிக்கிறார். இவர் நேற்று முன்தினம், கல்லுாரியில் இருந்து மாயமானார்.ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
