sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் இளநீர் வியாபாரி உள்பட 2 பேர் பலி

/

விபத்தில் இளநீர் வியாபாரி உள்பட 2 பேர் பலி

விபத்தில் இளநீர் வியாபாரி உள்பட 2 பேர் பலி

விபத்தில் இளநீர் வியாபாரி உள்பட 2 பேர் பலி


ADDED : ஏப் 13, 2025 04:56 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே சின்னசீரகாபாடியை சேர்ந்தவர் உத-யகுமார், 39. இளநீர் விற்று வந்தார். நேற்று காலை, 11:40 மணிக்கு, 'டி.வி.எஸ்., 50' மொபட்டில், சின்னசீரகாபாடி அருகே சேலம் - கோவை பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்-போது சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த வேன் மோதி, உதயகுமார் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்தில் பலியானார்.

அதே பகுதியில் நின்றிருந்த, கேரள மாநிலத்தை சேர்ந்த சீபா, 52, என்ற பெண்ணும் படுகாயம் அடைந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார், அப்பெண்ணை மீட்டு சேலம் அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி விசாரித்தனர். அதில், கோபிசெட்டிப்பாளை-யத்தை சேர்ந்த டிரைவர் சுப்ரமணி, 55, என்பவரை கைது செய்-தனர். அவர், 12 பேருடன், திருவண்ணாமலைக்கு சென்றபோது, வேன் விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்தது.யாசகம் எடுத்தவர்அதேபோல் அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமர் கோவில் முன், நேற்று காலை, 6:30 மணிக்கு, ஒரு முதியவர், லாரியில் அடிபட்டு இறந்து கிடந்தார். காரிப்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இறந்த முதியவர், கோவில் முன் யாசகம் எடுப்பவர். அங்குள்ள காலி இடத்தில், லாரியை நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வெடுப்பர். நேற்று முன்-தினம் இரவு மழை பெய்தபோது, லாரிக்கு அடியில் முதியவர் படுத்துள்ளார். இதை அறியாமல் ஒரு டிரைவர், லாரியை எடுத்துச்-சென்றபோது அதில் சிக்கி இறந்தது தெரியவந்தது. விபத்துக்கு காரணமான டிரைவரை தேடுகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us