/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சூறை காற்றால் 200 வாழைத்தார் சேதம்
/
சூறை காற்றால் 200 வாழைத்தார் சேதம்
ADDED : ஏப் 13, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி, பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. இதனால் பல இடங்களில் சாலையோர மரங்கள், வீடுகள் முன்புறம் இருந்த மரங்கள் அடியோடு சாய்ந்தன.
குறிப்-பாக பில்லுக்குறிச்சியில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில், 200க்கும் மேற்பட்ட மரங்கள் உடைந்து நாச-மாயின. அடுத்த மாதம் வெட்டும் நிலையில் இருந்த, 200க்கும் மேற்பட்ட தேன்வாழைத்தார்கள் சேதமடைந்தன. அதேபோல் பல இடங்களில் காற்றால், விவசாய பயிர்கள் சேதமடைந்தன.

