/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
21 வீடு இடித்து தரைமட்டம் பாதிக்கப்பட்டவர்கள் தவிப்பு
/
21 வீடு இடித்து தரைமட்டம் பாதிக்கப்பட்டவர்கள் தவிப்பு
21 வீடு இடித்து தரைமட்டம் பாதிக்கப்பட்டவர்கள் தவிப்பு
21 வீடு இடித்து தரைமட்டம் பாதிக்கப்பட்டவர்கள் தவிப்பு
ADDED : பிப் 04, 2025 06:35 AM
சேலம்: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, தண்ணீர்பந்தல் பகுதி ஆதிதிரா-விடர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள், ஒருசேர திரண்டு வந்து, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தபின் கூறி-யதாவது: எங்களுக்கு, 2002ல், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தலா, 3 சென்ட் அளவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்-பட்டது.
அதில் வீடு கட்டி வசித்து வருகிறோம். அனைவரும் விவசாய கூலி தொழிலாளிகள். இந்த வசிப்பிடத்தை
விட்டால், வாழ்வாதாரத்துக்கு வேறு எங்கும் வீடு, நிலம் எதுவும் கிடை-யாது. இந்நிலையில் கடந்த, 28ல்,
கெங்கவல்லி வருவாய் துறை-யினர், தனி தாசில்தார் ஆகியோர் போலீசார் சகிதமாக வந்து, எங்-களுடைய, 21
குடியிருப்பை இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்-டனர். இடிக்க வேண்டாம் என கூறியும் அதிகாரிகள்
கண்டுகொள்-ளவில்லை. அரசு வழங்கிய பட்டாவை காண்பித்தும், அலட்சியப்-படுத்தினர். அதனால், 21
குடும்பத்தினரும் ஆதரவு இன்றி, நிராயு-தபாணியாக நிற்கிறோம்.எனவே மாவட்ட நிர்வாகம், மீண்டும் எங்களுக்கு
இலவச வீட்டுமனைபட்டா வழங்கி, அரசு தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும். அத்துடன் இழப்பீடாக தலா, ஐந்து
லட்ச ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

