/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு கலைக்கல்லூரியில் பட்டம் பெற்ற 2,200 பேர்
/
அரசு கலைக்கல்லூரியில் பட்டம் பெற்ற 2,200 பேர்
ADDED : மார் 17, 2024 02:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு இருபாலர் கலைக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் செண்பகலட்சுமி தலைமை வகித்தார்.
தமிழ் பல்கலை துணைவேந்தர் திருவள்ளுவன், மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார். அதில், 2021 - 22ம் ஆண்டில், 1,179 இளநிலை, 359 முதுநிலை மாணவர்கள், 2022 - 23ல், 1,060 இளநிலை, 392 முதுநிலை மாணவர்கள் என, 2,990 பேர் பட்டம் பெற தகுதி பெற்றிருந்தனர். அவர்களில், 600 முதுநிலை, 1,600 இளநிலை என, 2,200 பேர் பட்டம் பெற்றனர்.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரேமலதா, பல்கலை பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.

