ADDED : மார் 02, 2026 05:30 AM
மல்லசமுத்திரம; நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லுாரி, இந்திய தொழில்நுட்ப கல்வி சங்கம்(ஐ.எஸ்.டி.இ.,) தமிழக பிரிவுடன் இணைந்து, 24வது, ஐ.எஸ்.டி.இ., மாணவர் மாநாட்டை நடத்தியது. கல்லுாரி தலைவர் பாரத்-குமார், எதிர்கால கல்வி முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர்கள், அதியமான் கல்லுாரி இயக்குனர் ரங்கநாத், துபாய் வைஸ் மைண்ட்ஸ் இயக்குனர் ராம்கி விஜயன் பேசினர். ஐ.எஸ்.டி.இ., தலைவர் சங்கர சுப்பிரமணியம், தமிழக பிரிவு செயலர் சவுரிராஜன் உள்ளிட்ட பிர-முகர்கள் பங்கேற்றனர். அவர்கள் நிலையான, புதுமையான எதிர்காலத்தை வடிவமைப்பதில், தொழில்நுட்ப கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இதில் செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மாண-வர்களின் திறன்களை முன்னிலைப்படுத்த வடி-வமைக்கப்பட்ட பல்வேறு ஆற்றல்மிக்க செயல்-பாடு, போட்டிகளை காட்சிப்படுத்தின. படைப்-பாற்றல் உள்ளிட்ட பங்களிப்புகளை அங்கீகரிக்க, ஐ.எஸ்.டி.இ., சிறந்த மாணவர் விருது, 104 பேருக்கு வழங்கப்பட்டது.
மஹேந்ரா பொறியியல் கல்லுாரி களின் செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், குழும முதல்-வர்கள் ரமேஷ், இளங்கோ, புல முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்
களான டாக்டர்கள் தவமணி, வித்யா
ஆகியோரும் பேசினர்.

