/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
28 பேருக்கு ரூ.1 கோடிஓய்வூதிய பலன் வழங்கல்
/
28 பேருக்கு ரூ.1 கோடிஓய்வூதிய பலன் வழங்கல்
ADDED : மார் 20, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
28 பேருக்கு ரூ.1 கோடிஓய்வூதிய பலன் வழங்கல்
ஆத்துார்:ஆத்துார் நகராட்சியில், 2022ல் ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள், அலுவலர்களுக்கு, ஓய்வூதிய காசோலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி தலைவி நிர்மலாபபிதா, ஓய்வு பெற்ற, 28 பேருக்கு, ஓய்வூதிய பலனுக்கான, 1.02 கோடி ரூபாய் காசோலைகளை வழங்கினார். அடுத்தகட்டமாக, 30 பேருக்கு, ஓய்வூதிய பலன் தொகை வழங்கப்படும் என, தலைவி கூறினார். நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால், சுகாதார அலுவலர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.