ADDED : டிச 28, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: காகாபாளையம் அருகே ராக்கிப்பட்டியை சேர்ந்த வக்கீல் கோவிந்தராஜ், 27. கடந்த, 9 இரவு, 9:45 மணிக்கு, காகாபாளை-யத்தில் சாலையோரம் நின்று, மொபைல் போனில் பேசிக்கொண்-டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த வேம்படிதாளம், ஆனைகுட்டப்பட்டியை சேர்ந்த அருண், 23, தினேஷ், 20, பார்த்-திபன், 24, ஆகியோர், முன்விரோதம் காரணமாக கோவிந்தரா-ஜிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, 3 பேரும், அவரை தாக்கினர்.
காயம் அடைந்த கோவிந்தராஜ், கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்-படி, மகுடஞ்சாவடி போலீசார் விசாரித்து, அருண் உள்பட, 3 பேரையும், நேற்று கைது செய்தனர்.

