ADDED : மே 08, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சாமிநாதபுரத்தில், மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், கிச்சிப்பாளையம் வரதராஜலு தெருவை சேர்ந்த சாமியப்பன், 22, பெரமனுார், நாராயணா பிள்ளை தெரு தினேஷ், 24, என தெரிந்தது.
சோதனையில் கஞ்சா விற்க பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் கொண்டலாம்பட்டி போலீசார், பைபாஸ் பகுதியில் நின்றிருந்த, ராக்கிப்பட்டி அருகே செங்கோடம்பாளையத்தை சேர்ந்த சூரியா, 26, என்பவரை கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை
பறிமுதல் செய்தனர்.