/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதுபாட்டில் பதுக்கி விற்ற 3 பேர் கைது
/
மதுபாட்டில் பதுக்கி விற்ற 3 பேர் கைது
ADDED : நவ 03, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்:தலைவாசல் அருகே, வீ.ராமநாதபுரத்தில், வீரகனுார் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்த, மணிவிழுந்தான், ராமசேஷபுரத்தை சேர்ந்த செல்வம், 55, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 12 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சாத்தப்பாடியை சேர்ந்த, செல்வி, 50, ஒதியத்துாரை சேர்ந்த, பரிமளா, 50, ஆகியோரை, கெங்கவல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

