sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சம்

/

ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சம்

ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சம்

ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சம்


ADDED : ஜூன் 15, 2025 02:13 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஒரே நாளில், 3 காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்துார், அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் அன்பரசன், 28. பி.இ., மெக்கானிக்கல் முடித்துவிட்டு, ஆத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒதியத்துாரை சேர்ந்தவர் ஸ்ரீசக்தி, 20. பி.எஸ்சி., பயோடெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்கள் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர்.

வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால், இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 9ல் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்து பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அன்பரசனின் உறவினர், ஜோடியை அழைத்துச்சென்றார்.

அதேபோல் மல்லியக்கரை ஊராட்சி கருத்தராஜாபாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 25. பிளஸ் 2 முடித்த இவர், சென்னையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அழகு சாந்தனா, 22. பி.இ., எலக்ட்ரிக்கல் படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

இருவரும் காதலித்த நிலையில், வெவ்வேறு சமுதாயம் என்பதால், இரு வீட்டினரும் ஏற்கவில்லை. கடந்த, 9ல் திருமணம் செய்து கொண்டனர். நேற்று ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் நவீன்குமார், மனைவியை, சென்னை அழைத்துச்செல்வதாக கூறி புறப்பட்டார்.

சிறுமியுடன் திருமணம்

சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் வாசுதேவன், 21. தனியார் பாலிடெக்னிக்கில், 2ம் ஆண்டு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த, பிளஸ் 2 முடித்த, 18 வயது சிறுமியை காதலித்து, கடந்த, 12ல் திருமணம் செய்து கொண்டார். நேற்று ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். விசாரணையில் சிறுமிக்கு, 18 வயது பூர்த்தியாகாததும், சிறுமியின் பெற்றோர், கிச்சிப்பாளையம் போலீசில் ஏற்கனவே புகார் அளித்ததும் தெரிந்தது. இதனால் சிறுமி, வாசுதேவனை, கிச்சிப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us