/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 மாதமாக திறக்கப்படாத சுகாதார வளாகம்
/
3 மாதமாக திறக்கப்படாத சுகாதார வளாகம்
ADDED : பிப் 16, 2025 02:49 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 8வது வார்டில் உள்ள சுகா-தார வளாகம், சமீபத்தில் துாய்மை இந்தியா திட்டத்தில், 7.50 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், மக்கள் பயன்-பாட்டுக்கு திறக்காமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவ-திக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, 8வது வார்டு கவுன்சிலரான, அ.தி.மு.க., நகர செயலர் சின்னதம்பி கூறுகையில், ''சுகாதார வளாகம் புதுப்பிக்கப்-பட்டு, 3 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால், பெண்கள், குழந்-தைகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் சந்தைப்பேட்-டையில் உள்ள கட்டண கழிப்பிடத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'ஓரிரு நாட்-களில் திறக்கப்படும்' என்றனர்.