sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கல்லுாரி பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் சிக்கினர்

/

கல்லுாரி பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் சிக்கினர்

கல்லுாரி பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் சிக்கினர்

கல்லுாரி பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் சிக்கினர்


ADDED : ஆக 14, 2025 02:43 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம், சேலம், கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சிவா, 27. குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரி பஸ் டிரைவராக உள்ளார். கடந்த ஜூலை, 9ல் கல்லுாரி முடிந்து, மாணவர்களை பஸ்சில் ஏற்றிக்கொண்டு, தாரமங்கலம், கோட்டைமேடு பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் சாலை நடுவே நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த அரவிந்த், செல்வராஜ், ராமு ஆகியோர், 'எங்களுக்கு வழி விடமாட்டாயா' என சிவாவிடம் கேட்டு, அவரை இறக்கி கட்டையால் தாக்கினர். செல்வராஜ், ராமு, பஸ் முன்புற கண்ணாடியை உடைத்ததில் அதன் துகள்கள், சில மாணவர்கள் மீது பட்டு காயம் ஏற்பட்டது. அவர்களை, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்து வீட்டுக்கு அனுப்பினர்.

பின் சிவா புகார்படி தாரமங்கலம் போலீசார், கடந்த ஜூலை, 10ல் வழக்குப்பதிந்தனர். ஆனால், 3 பேரும் தலைமறைவாகினர். இந்நிலையில் நேற்று, 3 பேரையும், கோட்டைமேட்டில் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us