sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2.75 டன் ரேஷன் அரிசி கடத்தல் 3 வேன் பறிமுதல்; 4 பேர் கைது

/

2.75 டன் ரேஷன் அரிசி கடத்தல் 3 வேன் பறிமுதல்; 4 பேர் கைது

2.75 டன் ரேஷன் அரிசி கடத்தல் 3 வேன் பறிமுதல்; 4 பேர் கைது

2.75 டன் ரேஷன் அரிசி கடத்தல் 3 வேன் பறிமுதல்; 4 பேர் கைது


ADDED : மே 01, 2024 01:43 PM

Google News

ADDED : மே 01, 2024 01:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில், 2.75 டன் ரேஷன் அரிசியை கடத்தியதால், 3 சரக்கு வேன்களுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.

சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, பழைய சூரமங்கலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும், அங்கு நிறுத்தியிருந்த, 3 சரக்கு வாகனங்களை எடுக்க முயன்றனர். உடனே தடுத்து போலீசார் விசாரித்தனர்.

அதில் பழைய சூரமங்கலம், காமராஜர் தெருவை சேர்ந்த சூர்யா, 39, மாணிக்கம், 38, பெரியபுதுார் ஏரிக்காடு ரவி, 40, பரமசிவம், 43, என தெரிந்தது. மேலும் வாகனங்களில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, 3 வாகனங்களுடன் அதில் கடத்தி வந்த, 2,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சூர்யா உள்பட, 4 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தொழிலுக்கு, 3 சரக்கு வாகனங்களை சொந்தமாக வாங்கிய சூர்யா, மாணிக்கம் உதவியுடன் சூரமங்கலம் அதன் சுற்றுப்பகுதிகளில் வீடுதோறும் ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி, அதை கோழி, மாட்டுப்பண்ணைகள், முறுக்கு வியாபாரிகள், வடமாநில தொழிலாளர்களுக்கு விற்று வந்தனர். இதில் ஏற்கனவே அரிசி கடத்திய, 2 வழக்குகள், சூர்யா மீது உள்ளதால் அவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us