sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

306 கிலோ புகையிலை: காரில் கடத்தியவர் கைது

/

306 கிலோ புகையிலை: காரில் கடத்தியவர் கைது

306 கிலோ புகையிலை: காரில் கடத்தியவர் கைது

306 கிலோ புகையிலை: காரில் கடத்தியவர் கைது


ADDED : ஜூன் 01, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், அழகாபுரம் போலீசார், நேற்று காலை, 7:00 மணிக்கு, ரெட்டியூர் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லாத, 'கிரிடா' கார், வந்த வேகத்தில் திரும்பிச்சென்றது. சந்தேகமடைந்த போலீசார், பின் தொடர்ந்து விரட்டிச்சென்று, எக்ஸ்சர்வீஸ்மேன் காலனியில், காரை மடக்கினர். பின் நடந்த சோதனையில் காருக்குள், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், 27 மூட்டைகளில், 306 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் ஓட்டிவந்தவர், ராஜஸ்தானை சேர்ந்த பஜன்லால், 26, என தெரிந்தது. வெளி மாநிலங்களில் மொத்தமாக வாங்கி வந்து, விற்பனையில் ஈடுபட்டு வருவதை ஒப்புக்கொண்டார். காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பஜன்லாலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us