ADDED : டிச 27, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார், கருப்பணம்பட்டி ஊஞ்சக்காட்டை சேர்ந்தவர் நல்லதம்பி, 46. டேங்க் ஆப்ரேட்டர். இவரது மனைவி கவிதா, 42. இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஒரு வாரமாக, நல்லதம்பி, தனியார் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து, கார் ஓட்டி பழகி வந்தார்.
நேற்று முன்தினம் காலை, நல்லதம்பி, மகன் சரத்பாலனையும் அழைத்துச்சென்றார். காரில், பூசாரிப்பட்டி, இந்திரா நகர் அருகே, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க காத்திருந்தார். அப்போது சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வேகமாக வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த நல்லதம்பி, மகன் சரத்பாலன், 12, நாரணம்பாளையம் நல்லதம்பி, 29, டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மாணிக்கம், 54, காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

