sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாடகை நிலுவையால் 4 கடைகளுக்கு 'சீல்'

/

வாடகை நிலுவையால் 4 கடைகளுக்கு 'சீல்'

வாடகை நிலுவையால் 4 கடைகளுக்கு 'சீல்'

வாடகை நிலுவையால் 4 கடைகளுக்கு 'சீல்'


ADDED : ஏப் 24, 2025 02:08 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:

சேலம் மாவட்டம் ஓமலுார் டவுன் பஞ்சாயத்து சார்பில், பஸ் ஸ்டாண்ட், செவ்வாய் சந்தை வளாகத்தில், 187 கடைகள் உள்ளன. வண்டிப்பேட்டை, சைக்கிள் ஸ்டாண்ட், காய்கறி சந்தை, ஆடு அடிக்கும் தொட்டி உள்பட பல்வேறு இனங்களுக்கு சுங்க வசூல்

செய்யப்படுகிறது.

இரு ஆண்டாக வாடகை செலுத்தாமல், 1 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை கடிதம் வழங்கியும் வசூலிக்க முடியவில்லை. இந்நிலையில் செவ்வாய் சந்தை வளாகத்தில் உள்ள, 4 கடைகள், 1.45 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்ததால், நேற்று முன்தினம், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் நளாயினி தலைமையில் அதிகாரிகள், 4 கடைகளை பூட்டி, 'சீல்' வைத்தனர்.

இதுகுறித்து நளாயினி கூறுகையில், ''நிலுவைத்தொகை வசூலிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். ஏப்., 25ல்(நாளை) சில கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். அதனால் டவுன் பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை கட்டி, நடவடிக்கை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us