ADDED : ஜன 26, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணியன் தலை-மையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், குள்ளம்பட்டி, மூலப்பாதையில் இருந்து தேவூர் வழியே இடைப்பாடி செல்லும் சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு டிப்பர் லாரி, 3 பொக்லைன் வாகனங்கள், அரசுக்கு வாகன வரி செலுத்தாமல் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பின், 3 பொக்லைன்களுக்கு, 2.50 லட்சம் ரூபாய், டிப்பர் லாரிக்கு, 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகனங்-களை பறிமுதல் செய்து, தேவூர் போலீசில், அலுவலர்கள் ஒப்ப-டைத்தனர்.

