sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

 தீ விபத்தில் சிக்கிய காரில் 400 கிலோ புகையிலை பறிமுதல்

/

 தீ விபத்தில் சிக்கிய காரில் 400 கிலோ புகையிலை பறிமுதல்

 தீ விபத்தில் சிக்கிய காரில் 400 கிலோ புகையிலை பறிமுதல்

 தீ விபத்தில் சிக்கிய காரில் 400 கிலோ புகையிலை பறிமுதல்


ADDED : நவ 27, 2025 11:52 PM

Google News

ADDED : நவ 27, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூரமங்கலம்: தீ விபத்தில் சிக்கிய காரில் இருந்த 400 கிலோ புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலம், கந்தம்பட்டி பைபாஸில், 'போக்ஸ்வேகன்' கார், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, இன்ஜின் பகுதியில் தீப்பற்றியது. அதை ஓட்டி வந்தவர், அவருடன் வந்தவர், காரை சாலையோரம் நிறுத்தி இறங்கினர். அங்கிருந்த மக்கள், தீயை அணைக்க முயன்றனர்.

இதுகுறித்த தகவலின்படி சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில், காரில் இருந்து இறங்கிய இருவரும் ஓட்டம் பிடித்தது தெரிந்தது.

காரை சோதனை செய்தபோது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், 400 கிலோ, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அப்பொருட்களுடன் காரை பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த கார் மேற்கு வங்க மாநில பதிவெண் கொண்டதாக இருந்தது. விசாரணையில் அதுவும் போலி நம்பர் பிளேட் என தெரிந்தது. காரின் உரிமையாளர், புகையிலை கடத்தி வந்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us