ADDED : பிப் 16, 2026 04:55 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. அங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில், நாற்-றங்கால் அமைத்து செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்து ஊராட்சிகளிலும், 43,௦௦௦ செடிகள் நடவு செய்ய, மாவட்ட
நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
குரால்நத்தம், திப்பம்பட்டி ஊராட்சி சார்பில் பனமரத்துப்பட்டி ஏரி பகுதியில் செடிகள் நடவு செய்வதற்கு தலா, 5 ஏக்கரில் நிலத்தை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது. மற்ற ஊராட்சிகளில், வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் அரசு புறம்போக்கு நிலம், ஏரி, குளம் உள்ளிட்ட இடங்களில் செடிகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எப்படி வளரும்?
இதுகுறித்து, ஊராட்சி செயலர்கள் கூறுகையில், பெரும்பாலான ஊராட்சிகளில் செடிகள் நடவு செய்வதற்கு இடமில்லை. ஒரு ஊராட்சிக்கு, 2,500க்கும் மேற்பட்ட செடிகள் நடவு செய்யும்படி அதிகாரிகள் கூறுகின்றனர். மழை காலம் முடிந்து, கோடை காலத்தில் செடிகள் நடவு செய்தால், எப்படி வளரும் என்றனர்.

