sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கலெக்டர் கார் முன் தீக்குளிக்க முயன்ற 5 பேர் கைது

/

கலெக்டர் கார் முன் தீக்குளிக்க முயன்ற 5 பேர் கைது

கலெக்டர் கார் முன் தீக்குளிக்க முயன்ற 5 பேர் கைது

கலெக்டர் கார் முன் தீக்குளிக்க முயன்ற 5 பேர் கைது


ADDED : மே 22, 2025 01:30 AM

Google News

ADDED : மே 22, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார், ராமநாயக்கன்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், வரும், 26 முதல், 29 வரை தேர் திருவிழா நடக்கவுள்ளது. இதில் சிலரை ஒதுக்கி வைத்து திருவிழா நடத்துவதாக, நேற்று ஆத்துார் வந்த, கலெக்டர் பிருந்தாதேவியிடம், ஒரு தரப்பினர் புகார் மனு அளித்தனர்.

அப்போது குப்பமுத்து மனைவி வசந்தா, 40, அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவர் உள்ளிட்டோரை, ஆத்துார் டவுன் போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். பின், 17 பேர் மீது, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர்.

இதில், வி.சி., கட்சியின், ஒன்றிய முன்னாள் செயலர் குப்பமுத்து, 46, அவரது மனைவி வசந்தா, 40, கனகசபை, 47, அவரது மனைவி சாந்தி, 38, சுரேஷ் மனைவி சங்கீதா, 38, ஆகியோரை நேற்று கைது செய்தனர். சுந்தரம் உள்பட, 12 பேரை தேடுகின்றனர். குப்பமுத்து மீது கொலை மிரட்டல், அடிதடி உள்பட, 65 வழக்குகள் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us