/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எறும்புத்தின்னி விற்க முயன்ற 5 பேர் கைது
/
எறும்புத்தின்னி விற்க முயன்ற 5 பேர் கைது
ADDED : நவ 25, 2024 02:57 AM
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை வனச்சரகம், லோக்-கூரில் எறும்புத்தின்னி விற்பதாக, டேனிஷ்பேட்டை வனத்துறை-யினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனால் வனச்சரகர் தங்-கராஜ் தலைமையில் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்-றனர். அங்கு கண்ணப்பாடியை சேர்ந்த மணி, 50, ராஜேஷ்குமார், 34, தர்மபுரி மாவட்டம் மாம்பாடி புரோக்கர் முருகன், 44, சேலம், டி.பெருமாபளையம் பெரியசாமி, 30, லோக்கூர் சவுந்தர-ராஜன், 59, ஆகியோர், எறும்பு தின்னியை வைத்துக்கொண்டு வியாபாரம் பேசியுள்ளனர். இதனால் அவர்களை கைது செய்த வனத்துறையினர், எறும்புத்தின்னி, பைக், மொபட்டை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'புரோக்கர் முருகன் மூலம், மற்ற, 4 பேரும், பல லட்சம் ரூபாய்க்கு எறும்புத்தின்-னியை பேரம் பேசி விற்க முயன்று சிக்கிக்கொண்டனர்' என்-றனர்.