/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : அக் 10, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சங்ககிரி அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சங்ககிரி அருகேயுள்ள காளிகவுண்டன்பாளையம், மொட்டாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன், 36, கூலி தொழிலாளி. இவர் கடந்த 2021 மார்ச் 28ல், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, மகுடஞ்சாவடி போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர்.
இவ்வழக்கு, சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சிலம்பரசனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீபா தீர்ப்பளித்தார்.