/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜன., 4ல் அ.தி.மு.க., கூட்டம் 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு
/
ஜன., 4ல் அ.தி.மு.க., கூட்டம் 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு
ஜன., 4ல் அ.தி.மு.க., கூட்டம் 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு
ஜன., 4ல் அ.தி.மு.க., கூட்டம் 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு
ADDED : டிச 30, 2025 01:27 AM
பனமரத்துப்பட்டி: அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சின், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயண பொதுக்-கூட்டம், சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டசபை தொகுதி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், வரும் ஜன., 4 மாலை, 4:00 மணிக்கு நடக்க உள்ளது. அதற்கு மேடை, பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. அப்பணியை நேற்று, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பார்வையிட்டார்.
தொடர்ந்து கூட்ட ஏற்பாடு குறித்து, அண்ணா தொழிற்சங்கம், மாணவர் அணி, வக்கீல் பிரிவு, தகவல் தொழில்நுட்பம் உள்-ளிட்ட அணி நிர்வாகி களுடன், தனித்தனியே ஆலோசித்து அறி-வுரை வழங்கினார்.
எம்.எல்.ஏ.,க்கள் வீரபாண்டி ராஜமுத்து, ஆத்துார் ஜெயசங்கரன், ஒன்றிய செயலர்கள், பனமரத்துப்பட்டி கிழக்கு பாலச்சந்திரன், மேற்கு ஜெகநாதன், வீரபாண்டி மேற்கு வருதராஜ், கிழக்கு வெங்-கடேசன், சேலம் செல்வ பிரகாஷ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலர் சித்துராஜ், தகவல் தொழில்நுட்ப செயலர் ஜெய-காந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் வீரபாண்டி தொகுதியில் இருந்து மட்டும், 50,000 பேர் பங்கேற்பதாகவும், அவர்களுக்கு தேவையான இருக்கை, குடிநீர், சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுவதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.

