sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது

/

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது


ADDED : ஜூன் 24, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட விவகாரத்தில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 44; சேலம், குகை பகுதியில் பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்கிறார். வேலையில் இருந்து நிற்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் வசூலித்த பணத்தை தராமல் ஏமாற்றி விட்டதாக, செவ்வாய்பேட்டை போலீசில், பைனான்ஸ் உரிமையாளர் புகாரளித்தார். இதுகுறித்து மோகன்ராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது மொபைல்போனில், பச்சிளம் குழந்தைகள் போட்டோ அதிகம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் மோகன்ராஜ், அவரது மனைவி நாகசுதா, 38, பச்சிளம் குழந்தைகளை வாங்கி, விற்பனை செய்தது தெரியவந்தது. சில தினங்களுக்கு முன், ஈரோட்டிலிருந்து ஆண் குழந்தையை வாங்கி வந்து, இடைப்பாடியில் ஒரு தம்பதிக்கு விற்றது தெரியவந்தது. குழந்தையை விற்ற தாய், குழந்தையை வாங்கிய தம்பதியிடம் விசாரணை நடத்தி, குழந்தையை நேற்று முன்தினம் மீட்டனர். மோகன்ராஜ், மனைவி நாகசுதா, இவர்களுக்கு கூட்டாளிகளாக செயல்பட்டு வந்த, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஸ்ரீதேவி, 43, ஈரோடு பர்வீன் 42, பத்மாவதி,46, ஜனார்த்தனன் 38, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,'மோகன்ராஜ் ஒரு குழந்தையை, 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, 7 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். தொடர் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மீது, ஏற்கனவே பல்வேறு வழக்கு உள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us