ADDED : பிப் 23, 2026 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மாசி வளர்பிறை முகூர்த்தத்தை ஒட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று திருமணம் செய்ய, சில ஜோடிகள் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் அதிகாலை முதலே திருமண ஜோடிகள் குவிந்தனர். அர்ச்சகர்கள், வேதங்கள் ஓத, ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அங்கு, 21 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
அதேபோல் கோட்டை பெருமாள் கோவிலில், 5 ஜோடிகள், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், 40 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

