ADDED : செப் 04, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், தலைவாசல், சாத்தப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் வேப்ப மரம் உள்ளது. அதில் விஷத்தன்மை கொண்ட கதண்டு தேனீ கூடு கட்டியிருந்தது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, கூட்டில் இருந்து வெளியேறிய தேனீக்கள், அந்த வழியே சென்றவர்களை கொட்டின.
அதில் முருகேசன் 52, சிவசக்திவேல் 37, சீனிவாசன் 60, அனேகன், 5, ஆர்த்மிகா, 7, உள்பட, 7 பேருக்கு, கண், கை, கால் முழுதும் வீக்கம், காயம் ஏற்பட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் வேப்ப மரத்தில் உள்ள கதண்டு கூட்டை அழிக்க, மக்கள் வலியுறுத்தினர்.