ADDED : ஜன 13, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உள்ள வேப்ப மரத்தில் தேனீ கூடு இருந்தது. நேற்று, கெங்கவல்லி - தெடாவூர் சாலையில் சென்ற வாகன ஓட்-டிகள் உள்பட, 20க்கும் மேற்பட்டோரை, தேனீக்கள் கொட்டின.
இதில் ஜெயக்கொடி, 62, துரைராஜ், 70, கவின், 65, கோபி, 14, சமுத்திரன், 10, சரவணன், 13, உள்பட, 8 பேர் படுகாயம் அடைந்து, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டனர். அதிகளவில் காயமடைந்த துரைராஜ், மேல் சிகிச்-சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.