ADDED : செப் 16, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும், 8 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் நேற்று உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்த சுமித்ரா, செவ்வாய்ப்பேட்டை ஸ்டேஷன், அங்கிருந்த தேவராஜன் கருப்பூர், அங்கிருந்த தவமணி அம்மாபேட்டை; அங்கிருந்த ஆனந்தலட்சுமி வீராணத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல் அஸ்தம்பட்டி மனோன்மணி அழகாபுரம், அங்கிருந்த சாந்தி செவ்வாய்ப்பேட்டை; சூரமங்கலம் சிவசங்கரன் அஸ்தம்பட்டி; கருப்பூர் விஜயேந்திரன், சூரமங்கலத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
