sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடுகளில் பரிதவித்த 9 பேர் கயிறு கட்டி பத்திரமாக மீட்பு

/

வீடுகளில் பரிதவித்த 9 பேர் கயிறு கட்டி பத்திரமாக மீட்பு

வீடுகளில் பரிதவித்த 9 பேர் கயிறு கட்டி பத்திரமாக மீட்பு

வீடுகளில் பரிதவித்த 9 பேர் கயிறு கட்டி பத்திரமாக மீட்பு


ADDED : டிச 04, 2024 07:00 AM

Google News

ADDED : டிச 04, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: வீடுகளில் பரிதவித்த, 9 பேரை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி, பத்திரமாக மீட்டனர்.

கனமழையால் சேலம் மாவட்டம் தாரமங்கலம், அணைமேடு அருகே ஒடசக்கரை ஏரி நிரம்பி, கரை உடைந்து வெளியேறிய தண்ணீர், அப்பகுதியில் வெள்ளக்காடாக நேற்று முன்தினம் சூழ்ந்தது. இதனால் நடுமேட்டில் சாலையில் அரிப்பு ஏற்பட்டு, வீடுகளில் வசித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இதை அறிந்து, தாரமங்கலம் ஆர்.ஐ., சரிதா உள்ளிட்ட வருவாய்த்துறையினர், போலீசார், ஓமலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள் சென்றனர். குடியிருப்பில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உள்பட, 9 பேரை கயிறு கட்டி மீட்டனர். அதேபோல் வீடுகளில் உணவின்றி தவித்த, 20 பேர் உள்பட 55 பேருக்கு, வருவாய்த்துறையினர் உணவு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், 'கருக்கல்வாடியை சேர்ந்த வெண்ணிலா, 24, சந்தோஷ், 30, கிருதேவா, 4, புகழ்செல்வன், 4, காசிராஜன், 50, ஆகியோர், நடுமேட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில், அப்பகுதியில் மழைநீர் கரை புரண்டு சென்றதோடு சாலையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் வெளியேற முடியாமல் தவித்தனர். இதை அறிந்து, அங்கு சென்று, அந்த, 5 பேர் மட்டுமின்றி, அங்கு வசித்த ரகுபதி குடும்பத்தினர், 4 பேர் என, 9 பேரை பத்திரமாக மீட்டோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us